மாட்டுப் பொங்கல்

ஜனவரி21, 2010 by natramizhan

 

என்னை குளிப்பாட்டுகின்றான்
எனது கொம்புகளுக்கு
வர்ணம் தீட்டினான்
சூரியக் கதிரின் ஒளியிலே
எனது கொம்புகள் பளபளப்பதாக‌
பீற்றிக்கொள்கின்றான்
இயற்கை இவனுக்கு
பிடிக்காத ஒன்று
ஐயையோ வர்ணத்தின் மேல்
திருநீறும்(!) வைத்து விட்டான்
இன்று தான் இவன்
என்னை மாடாக பார்ப்பான்
மற்ற நாட்களில் ஒர்
எந்திரம் நான் அவனுக்கு
இறுதியாக கை கூப்பியபடியே
வருகின்றான்…. ஓட்டுக்
கேட்பானோ என்று
உள்ளூற பயம் எனக்கு…..
ஓ…. வணங்குகிறானாம்
என்னைக் கடவுளாக‌
எண்ணுகிறானாம்
எனது பிள்ளையையும், என்னையும்
தனியே கட்டிவைத்து
அழகு(!) பார்த்தவன் ………

உழவர் தினம்

ஜனவரி21, 2010 by natramizhan

தரிசாய்ப் போன
நிலம்
இறந்து போன
நதியின் ஊடாக‌
விவசாயியின் நான்கு
பேர் பயணம்
“ஓ”வென்று ஓலமிட்டபடி
பின்னே ஓடி வருகிறது
உழவர் தினம்…..

என‌த‌ன்பு நண்பனுக்கு

அக்டோபர்2, 2009 by natramizhan

ram

எண்ணம் போல் வாழ்க்கை
என்றுமே எங்களின் கனவுகளாகும்
ஆனால் நீயோ இந்த‌க் க‌னவுக‌ளின்
ந‌டுவில் ஓர் க‌திர‌வ‌னாய் உதித்தாய்
இந்த‌ அற்ப‌க் க‌ன‌வுக‌ளை உதிர்த்தாய்
இப்போதும் வாழ்கின்றாய் நீ உன் எண்ண‌ம் போல
எப்போதும் வாழ்வாய் நீ
உன் எண்ண‌ம் போல..
என் வீட்டிற்க்கு நீ வ‌ந்தால்
எனக்கு ம‌ட்டும‌ல்ல‌ என் தாய்
த‌ந்தைத் , த‌ம்பி எல்லோருக்கும்
நண்ப‌னாகி விடுவாய் நீ
இது என் வீடு என்ற‌ல்ல‌
நீ எவ்வீடு சென்றாலும்
அவ்வீடு முழுவ‌தும்
உன் ந‌ண்ப‌க்கூட்ட‌ங்க‌ளால்
என்றுமே நிறைந்திருக்கும்..

ஒன்ற‌ல்ல‌, இர‌ண்ட‌ல்ல‌
நீ கொடுத்த‌ ந‌ண்ப‌ர் ஓர் பட்டாள‌ம்
அள்ளி , அள்ளிக் கொடுத்தாலும்
என்றுமே குறையாத‌ என்
ந‌ண்ப‌க் குவிய‌ல் நீ

ப‌ல‌ ப‌ல‌ ஒற்றுமைக‌ள்
சில‌ சில‌ வேற்றுமைக‌ள்
எனக்கு உன்னிட‌மிருப்பினும்
என்றுமே நீ என் ந‌ண்ப‌னென்ப‌தில்
பெருமித‌ம் ம‌ட்டும‌ல்ல‌ ச‌ற்றுக்
க‌ர்வ‌மே உண்டென‌க்கு .

உனது அ‌ன்ப‌ன்
என்றுமே உன‌த‌ருமை ந‌ண்ப‌ன்
ப.ல.நற்றமிழன் இச்சிறிய‌க் காணிக்கையை ஏற்றுக்கொள்.

அக்டோபர்2, 2009 by natramizhan

தலைப்பு ம்..ம்… தோன்றவில்லை
உனக்குத் தோன்றினால் நீயே வைத்துக்கொள்..

 MCM_edited

சிறு குறிப்பு எழுதச் சொன்னால்
ஒரு வரலாறு எழுதுபவன்
உன் வரலாறு எழுத எண்ணம்
என்ன செய்யப் போகிறேனோ ?…
உன்னைப் பற்றி உனக்கே
ஓர் அறிமுகமாம்..(க்.கும்)
பெண்ணை நிலவுடன் வர்ணித்து
பல இடங்களில் கேட்டதுண்டு..
பெண்ணே நிலவாக..
நிலவே பெண்ணாக..
இல்லை… நிலாப் பெண்ணாக‌
சுயம்புவானவள் என்னளவில் நீ மட்டும் தான்…

அன்பிற்க்கும் உண்டோ
அடைக்குந்தாழ் … அடைபட்ட
அடிபட்ட மனங்களில் நீ
அளிக்கின்றாய் அன்பை
ஓர் அன்னையாக…
விருப்பம் போல அமைவதில்லை
எல்லோர்க்கும் அவர் வாழ்க்கை
பிறர் விருப்பம் போல வாழுகின்றாய்
நீயும்… அது யாராகினும் வலிகள்
தான் உன் வழிகளெங்கிலும்

முயன்று முயன்றுப் பார்க்கின்றாய்
மனமின்மையால் தோற்க்கின்றாய்..
அழைக்கின்றேன் எனதன்பு
இயற்கையை அடுத்து வரும்
தருணங்களில் உனக்கான வாழ்க்கையை
உன்னிடமே கொடுப்பதற்க்காக.. 
கேட்டு விட்டு சிரிக்கின்றாய் நீ
சிறு சிறு குறிப்புகளாக….

என்னவென்று புரியாமல்
மலர்வது காதல்…
இது இன்னதென்று புரிவதால்
மலர்வது நட்பு….
அப்படியோர் நன்னாளில் மலர்ந்தது
தான் நம் நட்பும் கூட…

அன்று உனை எதற்க்காக நான்
அழைத்தேன் என் எண்ணிப்
பார்க்க முடிவிலே புலப்பட்டது
நன்றி சொல்லத் தான் என..
இன்னும் சொல்லவில்லை அன்னன்றியை
உன்னிடம் நான்….

உனைப் பற்றி நீயும் கூற‌
எனைப் பற்றி நானும் கூற‌
நகர்ந்தன நாட்களும்
நம் நட்பைப் பற்றிக் கூறிக்கொண்டே…..

பலவற்றில் பல திசைகளில்
பயணம் செய்யும் நாமும் கூட‌
பயணிக்கின்றோம் ஒரே திசையில்
நட்பெனும் பாதையிலே… 

இந்தவொரு திங்களில்
என்னவெல்லாம் ஆனாய் நீயெனக்கு
பிரியமான தோழியாக..
புதிர்ப் போடும் புத்திசாலியாக..
வகுப்பெடுக்கும் ஆசிரியையாக..
பாடம் படிக்கும் மாணவியாக…
என்னிரண்டாம் தாயுமாக..
குறும்பு செய்யும் ஒரு சேயுமாக..
ம்.ம்.ம். கேட்கிறதெனக்கும் நீ
போதுமென சொல்லும் வார்த்தையும்…
வார்த்தைகளில் வாழ்க்கையை
அடக்க முயலும் நான்
முட்டாளாக்கப்படுவது புதிதல்ல‌
என்பதால் சற்று முயன்றே
நானும் பார்த்தேன்….
எனதாசை ஒன்றுதான்
இவ்வுடலின் இறுதி வரை
எனக்கான தோழியாய்
என்றுமே நீ………………
நட்புடன்.
ப.ல.நற்றமிழன்..

எனதருமைத் தோழி புவ‌னாவிற்க்கு இச்சிறு கவிதையை(அப்படின்னு நினைக்கிறேன்) சமர்ப்பிக்கின்றேன் .

உணர்ந்து கொண்டேன்

செப்டம்பர்20, 2009 by natramizhan

பூகம்பம் மட்டும் அல்ல‌
பூக்களும் கூட சில நேரங்களில்
இரணங்களை உண்டாக்கும் என‌
உன்னை பார்த்த பின்
உணர்ந்து கொண்டேன்.

8G0CASI52RQCAS8DOCECAKU9R97CARTAXQMCAVGP0XDCAINXTG5CAGKHIX0CA8LQZYJCAZT8B4QCA7D4TU1CA7YL6TICAKKSN0OCAXQ06E2CAZXGCL9CABHZAZYCA0ITTNKCAKW2XCZCAFM3565CASI5PYA

ஊனம் ?

செப்டம்பர்20, 2009 by natramizhan

 

photo

 

உள்ளூறப் பாய்ந்து
ஊடறுத்துப் போன‌
உனது பார்வையினால்
உள்ளம் ஊனமாகிப்
போனவன் ஓடுகிறேன்
மனிதம் மறந்து போன‌
மண்ணெங்கும் ஓடுகிறேன்
ஊனத்தை சரிசெய்ய‌
முன் சென்ற ஊனனவன் கூறுகிறான்
ஊனம் ஒரு குறையில்லை
தம்பி ஊனம் ஒரு குறையில்லை
உலகம் ஊனமாகிப் போனதனால்….
வா , உள்ளே போகலாம் ?

உப்புக்கரிக்கும்……

செப்டம்பர்20, 2009 by natramizhan

rain

இரவு பகல் பாராமல்
இயங்கிக் கொண்டே இருக்கும்
உன் புறம் தழுவிய‌
ஓர் மழைத் துளி
உதடு வழி உள் செல்ல‌
ஆம் , மழையும் உப்புக்கரிக்கும் …..

இருத்தல்

செப்டம்பர்20, 2009 by natramizhan

இருத்தலுக்கான போரினிலே
இறந்ததுவும் தெரியாமல்
இயங்கிக் கொண்டே
இருந்து விட்டேன்….

உள்ளிருந்த பிணவாடை
வெளிவந்து தன்னை
தனக்கே முகம் காட்ட‌
முயலுகிறது வெகு வருடங்களாய்….

என்று நான் இறந்து போனேன்?
இறந்த பின்னுமா அறுவை சிகிச்சை ?
மனிதம் மறந்த அன்றா ?
இல்லாத பொருளினால்
இறப்பது சாத்தியமா?

உண்மைகள் ஊமையானதே அன்றா ?
மீளக் கூறுகிறேன்
இல்லாத பொருளினால்
இறப்பது சாத்தியமா?

இளமைப் பருவத்திலா ?
ம்ம்ம்…..

ஆம் , குழந்தைப் பருவத்திலே
நீங்கள் நிகழ்த்திய செய்கையது
என்னுலகம் விட்டு என்னை
இவ்வுலகம் இழுத்து வந்து
இறந்து போன இதயத்தை
உயிர்ப்பிக்கச் செய்தீர்கள்
வாழுகிறேன் பிணமாக………

 

skeleton-work-2_~k0041590

………..

செப்டம்பர்20, 2009 by natramizhan

உலகின் மிக அழகான ஒன்றும்
மிக ஆபத்தான ஒன்றும்
ஒரு புள்ளியில் சந்தித்தன
” மன்னிப்பு “

forgive

” கண் தானம் “

செப்டம்பர்20, 2009 by natramizhan

உள்ளூற உறங்கிய பின்னும்
உலகம் காணுவோம் வாருங்கள்

eye