மாட்டுப் பொங்கல்
என்னை குளிப்பாட்டுகின்றான்
எனது கொம்புகளுக்கு
வர்ணம் தீட்டினான்
சூரியக் கதிரின் ஒளியிலே
எனது கொம்புகள் பளபளப்பதாக
பீற்றிக்கொள்கின்றான்
இயற்கை இவனுக்கு
பிடிக்காத ஒன்று
ஐயையோ வர்ணத்தின் மேல்
திருநீறும்(!) வைத்து விட்டான்
இன்று தான் இவன்
என்னை மாடாக பார்ப்பான்
மற்ற நாட்களில் ஒர்
எந்திரம் நான் அவனுக்கு
இறுதியாக கை கூப்பியபடியே
வருகின்றான்…. ஓட்டுக்
கேட்பானோ என்று
உள்ளூற பயம் எனக்கு…..
ஓ…. வணங்குகிறானாம்
என்னைக் கடவுளாக
எண்ணுகிறானாம்
எனது பிள்ளையையும், என்னையும்
தனியே கட்டிவைத்து
அழகு(!) பார்த்தவன் ………

No trackbacks yet.