இந்திய இராணுவம் மக்களுக்கு செய்த அளப்பறிய சேவைகள்
இந்தியா குடியரசு நாளில் (அதாவது இந்தியா மக்களாட்சியாகிய நாளில்) இந்திய இராணுவம் 1947ஆகத்து 15லிருந்து இந்திய மக்களுக்கும், அண்டை நாடுகளிலுள்ள மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
- உதவுகிறேன் என்ற பெயரில் காசுமீர் நாட்டிற்குச் சென்று இன்னும் அந்த நாட்டை விட்டு நகராமல் அந்த நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று, பெண்களை கற்பழித்து, சிறுவர்களை அனாதையாக்கி வருகின்றது. காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து 100க்கும் அதிகமான சிறுவர்களும், இளைஞர்களும் இறந்தார்கள் என்பதை இந்திய ஊடகங்களே கூறியுள்ளன.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,214
விசாரணையில் இருக்கும் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,969
கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,17,117
விதவைகளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 22,726
அநாதையாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,07,347
பாலியல் வல்லுறவுக்கு ஆக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9,912
பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும், காசுமீரிகள் இராணுவத்தால் கொல்லப்படுகின்றார்கள் என்ற உண்மை அண்மையில் வெளியானது. (1,2)
- முதலில் பண்ணையார்களுக்கு எதிராக தொடங்கிய விவசாயிகளின் புரட்சி, அடக்குமுறை ஹைதராபாத் நிசாமிற்கு எதிராகவும் தொடர்ந்தது. இந்த போராட்டம் 1947லிருந்து 1951வரை நடந்தது. 1951ல் பண்ணையார்களை எதிர்த்து போராடிய பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், பொதுமக்களைத் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றது இந்திய இராணுவம்.(3)
- இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், மேகலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இராணுவ அதிகார சிறப்பு சட்டம் 1958 (AFSPA 1958) மூலம் எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் யாரை வேண்டுமென்றாலும் கொன்று, கைது செய்து வருகின்றது. பெண்களை கற்பழித்து வருகின்றது. இந்த மாநிலங்களில் இராணுவத்தின் நடவடிக்கைகளை அறிய உங்களுக்கு இரு நிகழ்வுகள் போதுமானது. 1)எங்கள் குழந்தைகளை விட்டுவிடுங்கள், எங்கள் சதைகளை எடுத்துக்கொள்ளுங்கள், எங்களை கற்பழியுங்கள் என்று இராணுவ முகாம் முன்பு நிர்வாணமாக போராடினர் மணிப்பூர் தாய்கள். 2) மனோரமா என்ற பெண்ணை இராணுவம் கற்பழித்து கொன்றதை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார் ஐரோம் சர்மிளா.(4)

- ஆழிப்பேரலை தாக்கிய பின்னர் தமிழகத்திற்கு வந்த இராணுவம் இறந்த உடல்களை நாங்கள் அகற்றவோ, தொடவோ மாட்டோம் என்று சொன்னது. அதை அன்றைய முதலமைச்சர்.செயலலிதா சட்டமன்றத்தில் கண்டித்து பேசினார். அண்மையில் சென்னையில் தில்சன் என்ற சிறுவன் விளையாட்டு தனமாக இராணுவ குடியிருப்பினுள் நுழைந்த பொழுது சுட்டு கொன்றார் ஒரு இராணுவ வீரர்(4)
- மத்திய இந்தியாவில் பன்னாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிடும் பழங்குடிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது. முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனரான இராம் மோகனனின் கூற்றை அப்படியே தருகிறேன்.
” இராணுவத்தின் மேல் உள்ள கொலை செய்தல் , கற்பழித்தல் போன்ற பெரிய குற்றங்களை சற்று தள்ளி வைத்து விட்டு, ஆடு மற்றும் கோழிகளை படையினர் திருடுதல் போன்ற ஆதிவாசிகளின் சிறிய புகார்களைப் பாருங்கள். இது மிகவும் மோசமான ஒன்று.”
- காங்கோவில் ஐநா அமைதி பாதுகாப்பு படையில் இருந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த பல பெண்களை கற்பழித்துள்ளார்கள். பல நாடுகள் இராணுவமும், பன்னாட்டு ஊடகங்களும் இருக்கும் பொழுதே இப்படி செய்தவர்கள், ஊடகங்களும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களும் மறந்து போன இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும், காசுமீரில் என்ன செய்வார்கள் என்று நான் விளக்க தேவைஇல்லை.(5)
- வங்காள தேசத்தில் விடுதலைக்காக போராடிய உண்மையான குழுக்களை அழித்தொழித்து.
- அமைதி படை என்ற பெயரில் ஈழத்தில் நுழைந்த இந்திய இராணுவம் மருத்துவமனைகள் என்று கூட பாராமல் குண்டு வீசியது, பொதுமக்களின் மேல் டாங்கிகளை ஏற்றியது என பல வன்முறைகளை செய்தது, இவையெல்லாம் சாத்தானின் படைகள் என்று நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது மட்டுமின்றி, எல்லா தொழில்நுட்ப உதவிகளும் செய்தது.
- அதுமட்டுமின்றி இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவித்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது, இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போதும், ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்ட போதும் உலகின் மூன்றாவது பெரிய கடற்படை வேடிக்கை பார்த்ததே தவிர மீனவ குடிமக்களை காப்பாற்றவில்லை. சில நாட்களுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் மாடு திருடியதாக கூறி ஒருவரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் காட்சி வெளியாகியுள்ளது. மனதைரியம் உள்ளவர்கள் மட்டும் இக்காணொளியை பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=e5kBqutAcio
- இந்தியா விடுதலை பெற்று விட்டதாக கூறிக்கொண்டாலும் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடக்கியாள வகுத்த அதே காலனிய ஆதிக்கச் சட்டங்களைக் கொண்டே இயங்கிவருகின்றன.
நற்றமிழன்.ப
தரவுகள்:
1) http://natramizhan.wordpress.com/2010/12/03/
2) http://kashmir.wordpress.com/
3) http://en.wikipedia.org/wiki/Telangana_Rebellion
4) http://www.indianexpress.com/news/army-must-handover-person-responsible-for-di/813657/

ada pongappa atharathoda solunga ?? thveeravathiya petha thaiee thaan magana kurai solluvalaaa? islamiya makkal athepola thivbira vathiyai vittu koduppara ? summa ungaluukuu indian army mela irukka kobatha ippdi thiruppathinga prove it ?
What ever Natramaizhan says correct only. There is no fake in this article.
நண்பர்.கலை செல்வன்,
கட்டுரையை நீங்கள் முழுதாக படிக்கவில்லை என்று எண்ணுகின்றேன். கட்டுரையின் இறுதியில் தரவுகள் என்று நான் கொடுத்துள்ளவை ஆதாரங்களே……
நல்ல தொகுப்பு தோழர்…
நன்றி பாலாஜி
Its really good article…
நன்றி கார்த்திக்
தம்பி, தங்களிடம் இருந்து மற்றுமொரு அருமையான தகவல்
நன்றி. மோகன் அண்ணா…
eerrrrrrrrrrr
என்ன ஆச்சு சதீஷ்