Archive for the ‘ சமூகம் ’ Category
சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர்.இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள சேருகுரி இராஜ்குமார் என்ற ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் “நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதி பேச்சு வார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்து [ READ MORE ]
இராம்மோகன், எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தலைமை நிர்வாகி. காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் கலகக்காரர்களை எதிர்த்து பணியாற்றியவர். சமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 மைய காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய இவரை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நியமித்துள்ளார். இவர் தெகல்கா நிருபர் சோமா சௌத்ரிக்கு அளித்த நேர்காணல் இதோ… வங்காளத்தில் நடைபெற்ற தொடர்வண்டி தாக்குதலுக்கு பின் நக்சல்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் வான் படைகளை களமிறக்குவது பற்றிய உங்களது [ READ MORE ]
இந்தியாவில் எப்பொழுதெல்லாம் குண்டு வெடிக்கின்றதோ , அதன் அடுத்த நாள் முழுவதும் ஊடகங்கள் ஒரு செய்தியை தாங்கிவரும், அது தான் “இசுலாமிய பயங்கரவாதம்”. அரச அதிகாரம் அந்த குண்டுவெடிப்பிற்க்கு காரணமாகவும், அதன் மூளையாகவும் செயல்பட்டதாக கூறி சில இசுலாமியர்களை கைது செய்யும். அரசு மற்றும் ஊடகங்களினால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது இந்த இசுலாமிய பயங்கரவாதம். ஆனால் இதன் பின்னர் நடப்பவை எதுவுமே பெரும்பான்மையான ஊடகங்களில் வெளிவருவதில்லை (அ) வெளிவிடப்படுவதில்லை.இதை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். ஆனால் செய்திகளில் குற்றவாளிகளாக [ READ MORE ]
உலகின் மிக இளம் தீவிரவாதி உலகிலேயே மிக இளம் தீவிரவாதியை இந்தியா கண்டுபிடித்துள்ளது. ஆம் …அவன் வயது இரண்டு மட்டுமே…நம்புங்கள் உண்மை தான்…நம்புங்கள்… சட்டீஷ்கர் மாநிலம், தாண்டிவாடா மாவட்டம், கோம்பாடு கிராமத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வயது குழந்தை. மத்வி முகேஷ் தான் அவர். தனது தாயை சல்வாஜூடுமிற்க்கு (பச்சை வேட்டை (operation green hunt) தற்போதைய பெயர்). பறிகொடுத்த கோபத்தில் சல்வா ஜீடும் படையினரை (உள்ளூர் கூலிப்படை, சட்டீஷ்கர் மாநில காவல் துறை, எல்லை பாதுகாப்பு [ READ MORE ]
நீதிமன்றத்தை மிரட்டும் சாதி பஞ்சாயத்துகள் சாதி தனது கோரமுகத்தையும், இரத்தக்கறை படிந்த பற்களையும் இந்தியாவில் காட்டுவது என்பது வழமையான ஒன்றாகி விட்டது. சாதிக்காகவும், தனது கௌரவத்திற்க்காகவும் தான் பெற்ற மகள் (அ) மகனை கொல்வதும் இந்தியாவில் புதியவை அல்ல. பின் ஏன் இந்த கட்டுரை? சாதிப் பஞ்சாயத்துகள் கொடுக்கும் மரண தண்டனைகளை இந்திய நீதிமன்றம் தடுக்கக் கூடாது, அவ்வாறு தடுத்தால் நீங்கள் எந்த சட்டத்தை வைத்து தடுகின்றீர்களோ, அச்சட்டத்தையே மாற்ற எங்களால் முடியும் என அறைகூவல் விடுக்கின்றது [ READ MORE ]
பற்றி எரிந்த தலித் குடும்பங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள கிசார் மாவட்டத்தில் உள்ளது மிர்சாபூர் கிராமம். இங்கு வாழும் ஜாட் என்ற சமூகத்தை சேர்ந்த இராசேந்தர் என்பவர் வால்மீகி (தாழ்த்தப்பட்ட) சமூகத்தை சேர்ந்த யோகேசு என்பவரை கடந்த புதன் அன்று திட்டினார். இந்த பிரச்சனை பஞ்சாயத்திடம் செல்ல வால்மீகி சமூகத்தை சேர்ந்த வீர் பன் மற்றும் கர்ன்பால் என்ற இருவரும் சாட்சியம் சொல்ல சென்றனர் ஆனால் இவர்கள் இருவரையும் பெரும்பான்மை ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்தில் வைத்து [ READ MORE ]
இரவு பகல் பாராமல் இயங்கிக் கொண்டே இருக்கும் உன் புறம் தழுவிய ஓர் மழைத் துளி உதடு வழி உள் செல்ல ஆம் , மழையும் உப்புக்கரிக்கும் [ READ MORE ]
இருத்தலுக்கான போரினிலே இறந்ததுவும் தெரியாமல் இயங்கிக் கொண்டே இருந்து விட்டேன்…. உள்ளிருந்த பிணவாடை வெளிவந்து தன்னை தனக்கே முகம் காட்ட முயலுகிறது வெகு வருடங்களாய்…. என்று நான் இறந்து போனேன்? இறந்த பின்னுமா அறுவை சிகிச்சை ? மனிதம் மறந்த அன்றா ? இல்லாத பொருளினால் இறப்பது சாத்தியமா? உண்மைகள் ஊமையானதே அன்றா ? மீளக் கூறுகிறேன் இல்லாத பொருளினால் இறப்பது சாத்தியமா? இளமைப் பருவத்திலா ? ம்ம்ம்….. ஆம் , குழந்தைப் பருவத்திலே நீங்கள் நிகழ்த்திய [ READ MORE ]
உலகின் மிக அழகான ஒன்றும் மிக ஆபத்தான ஒன்றும் ஒரு புள்ளியில் சந்தித்தன ” மன்னிப்பு [ READ MORE ]
உள்ளூற உறங்கிய பின்னும் உலகம் காணுவோம் வாருங்கள்[ READ MORE ]
Get every new post delivered to your Inbox.