Archive for the ‘ மனிதம் ’ Category
இராம்மோகன், எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தலைமை நிர்வாகி. காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் கலகக்காரர்களை எதிர்த்து பணியாற்றியவர். சமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 மைய காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய இவரை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நியமித்துள்ளார். இவர் தெகல்கா நிருபர் சோமா சௌத்ரிக்கு அளித்த நேர்காணல் இதோ… வங்காளத்தில் நடைபெற்ற தொடர்வண்டி தாக்குதலுக்கு பின் நக்சல்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் வான் படைகளை களமிறக்குவது பற்றிய உங்களது [ READ MORE ]
இந்தியாவில் எப்பொழுதெல்லாம் குண்டு வெடிக்கின்றதோ , அதன் அடுத்த நாள் முழுவதும் ஊடகங்கள் ஒரு செய்தியை தாங்கிவரும், அது தான் “இசுலாமிய பயங்கரவாதம்”. அரச அதிகாரம் அந்த குண்டுவெடிப்பிற்க்கு காரணமாகவும், அதன் மூளையாகவும் செயல்பட்டதாக கூறி சில இசுலாமியர்களை கைது செய்யும். அரசு மற்றும் ஊடகங்களினால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது இந்த இசுலாமிய பயங்கரவாதம். ஆனால் இதன் பின்னர் நடப்பவை எதுவுமே பெரும்பான்மையான ஊடகங்களில் வெளிவருவதில்லை (அ) வெளிவிடப்படுவதில்லை.இதை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். ஆனால் செய்திகளில் குற்றவாளிகளாக [ READ MORE ]
உலகின் மிக இளம் தீவிரவாதி உலகிலேயே மிக இளம் தீவிரவாதியை இந்தியா கண்டுபிடித்துள்ளது. ஆம் …அவன் வயது இரண்டு மட்டுமே…நம்புங்கள் உண்மை தான்…நம்புங்கள்… சட்டீஷ்கர் மாநிலம், தாண்டிவாடா மாவட்டம், கோம்பாடு கிராமத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வயது குழந்தை. மத்வி முகேஷ் தான் அவர். தனது தாயை சல்வாஜூடுமிற்க்கு (பச்சை வேட்டை (operation green hunt) தற்போதைய பெயர்). பறிகொடுத்த கோபத்தில் சல்வா ஜீடும் படையினரை (உள்ளூர் கூலிப்படை, சட்டீஷ்கர் மாநில காவல் துறை, எல்லை பாதுகாப்பு [ READ MORE ]
நீதிமன்றத்தை மிரட்டும் சாதி பஞ்சாயத்துகள் சாதி தனது கோரமுகத்தையும், இரத்தக்கறை படிந்த பற்களையும் இந்தியாவில் காட்டுவது என்பது வழமையான ஒன்றாகி விட்டது. சாதிக்காகவும், தனது கௌரவத்திற்க்காகவும் தான் பெற்ற மகள் (அ) மகனை கொல்வதும் இந்தியாவில் புதியவை அல்ல. பின் ஏன் இந்த கட்டுரை? சாதிப் பஞ்சாயத்துகள் கொடுக்கும் மரண தண்டனைகளை இந்திய நீதிமன்றம் தடுக்கக் கூடாது, அவ்வாறு தடுத்தால் நீங்கள் எந்த சட்டத்தை வைத்து தடுகின்றீர்களோ, அச்சட்டத்தையே மாற்ற எங்களால் முடியும் என அறைகூவல் விடுக்கின்றது [ READ MORE ]
பற்றி எரிந்த தலித் குடும்பங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள கிசார் மாவட்டத்தில் உள்ளது மிர்சாபூர் கிராமம். இங்கு வாழும் ஜாட் என்ற சமூகத்தை சேர்ந்த இராசேந்தர் என்பவர் வால்மீகி (தாழ்த்தப்பட்ட) சமூகத்தை சேர்ந்த யோகேசு என்பவரை கடந்த புதன் அன்று திட்டினார். இந்த பிரச்சனை பஞ்சாயத்திடம் செல்ல வால்மீகி சமூகத்தை சேர்ந்த வீர் பன் மற்றும் கர்ன்பால் என்ற இருவரும் சாட்சியம் சொல்ல சென்றனர் ஆனால் இவர்கள் இருவரையும் பெரும்பான்மை ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்தில் வைத்து [ READ MORE ]
உள்ளூறப் பாய்ந்து ஊடறுத்துப் போன உனது பார்வையினால் உள்ளம் ஊனமாகிப் போனவன் ஓடுகிறேன் மனிதம் மறந்து போன மண்ணெங்கும் ஓடுகிறேன் ஊனத்தை சரிசெய்ய முன் சென்ற ஊனனவன் கூறுகிறான் ஊனம் ஒரு குறையில்லை தம்பி ஊனம் ஒரு குறையில்லை உலகம் ஊனமாகிப் போனதனால்…. வா , உள்ளே போகலாம் [ READ MORE ]
இரவு பகல் பாராமல் இயங்கிக் கொண்டே இருக்கும் உன் புறம் தழுவிய ஓர் மழைத் துளி உதடு வழி உள் செல்ல ஆம் , மழையும் உப்புக்கரிக்கும் [ READ MORE ]
உள்ளூற உறங்கிய பின்னும் உலகம் காணுவோம் வாருங்கள்[ READ MORE ]
எனது தாயை கற்பழிக்கின்றான் சிங்களவன் என் கண்முன்னே முரளீதரன் பந்துவீச்சில் இந்தியனொருவன் தனது ஆட்டத்தை பறிகொடுத்து வெளியேறுகின்றான் வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக மன்னியும் நண்பனை சாக்கடையிலிருந்து தாய்ப்பால் பருகியவனவன் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள் அம்பானியும் , அகில உலகமும் பார்வையாளனாக மட்டும் இங்கே மாண்டுபோன மாந்த நேயமும் ,,,,,, http://video.yahoo.com/watch[ READ MORE ]
காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக நானிங்கு வந்து நகர்ந்தே விட்டது ஒரிரு திங்களும் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக வடக்கின் வசந்தமாம்(?) இராஜபக்சே பிளிறுகிறது காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக புலிகளால் மட்டும் தான் இவ்வளவு பிரச்சனையாம் மடை மாற்றுகிறார்கள் புத்திசாலிகள்(?) காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக இங்கே இருப்பது இன்னல் முகாம் இடப்பெயர்வு முகாமல்ல கதைக்கின்றனர் மாந்தநேயர்கள் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக இங்கே நிலைமையை சீர்(ழ்)படுத்த இந்தியாவும் கொடுத்தது அறுநூறு கோடியும் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக சோமாலியா தேவை இல்லை இங்கே வந்து எங்களைப் பாருங்கள் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.