Archive for the ‘ ம‌னித‌ம் ’ Category

நக்சல்களுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்குவது பேரழிவை உண்டாக்கும்

 இராம்மோகன், எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தலைமை நிர்வாகி. காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் கலகக்காரர்களை எதிர்த்து பணியாற்றியவர். சமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 மைய காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய இவரை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நியமித்துள்ளார். இவர் தெகல்கா நிருபர் சோமா சௌத்ரிக்கு அளித்த நேர்காணல் இதோ… வங்காளத்தில் நடைபெற்ற தொடர்வண்டி தாக்குதலுக்கு பின் நக்சல்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் வான் படைகளை களமிறக்குவது பற்றிய உங்களது [ READ MORE ]

காவ‌ல் துறையால் க‌ட்ட‌மைக்க‌ப‌டும் “இசுலாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்”,ஒத்து ஊதும் ஊட‌க‌ங்க‌ளும் – ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

இந்தியாவில் எப்பொழுதெல்லாம் குண்டு வெடிக்கின்றதோ , அதன் அடுத்த நாள் முழுவதும் ஊடகங்கள் ஒரு செய்தியை தாங்கிவரும், அது தான் “இசுலாமிய பயங்கரவாதம்”. அரச அதிகாரம் அந்த குண்டுவெடிப்பிற்க்கு காரணமாகவும், அதன் மூளையாகவும் செயல்பட்டதாக கூறி சில இசுலாமியர்களை கைது செய்யும். அரசு மற்றும் ஊடகங்களினால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது இந்த‌ இசுலாமிய பயங்கரவாதம். ஆனால் இதன் பின்னர் நடப்பவை எதுவுமே பெரும்பான்மையான ஊடகங்களில் வெளிவருவதில்லை (அ) வெளிவிடப்படுவதில்லை.இதை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். ஆனால் செய்திகளில் குற்றவாளிகளாக [ READ MORE ]

நீதிமன்றத்தை மிரட்டும் சாதி பஞ்சாயத்துகள்

நீதிமன்றத்தை மிரட்டும் சாதி பஞ்சாயத்துகள் சாதி தனது கோரமுகத்தையும், இரத்தக்கறை படிந்த பற்களையும் இந்தியாவில் காட்டுவது என்பது வழமையான‌ ஒன்றாகி விட்டது. சாதிக்காகவும், தனது கௌரவத்திற்க்காகவும் தான் பெற்ற மகள் (அ) மகனை கொல்வதும் இந்தியாவில் புதியவை அல்ல. பின் ஏன் இந்த கட்டுரை? சாதிப் பஞ்சாயத்துகள் கொடுக்கும் மரண தண்டனைகளை இந்திய நீதிமன்றம் தடுக்கக் கூடாது, அவ்வாறு தடுத்தால் நீங்கள் எந்த சட்டத்தை வைத்து தடுகின்றீர்களோ, அச்சட்டத்தையே மாற்ற எங்களால் முடியும் என அறைகூவல் விடுக்கின்றது [ READ MORE ]

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக …………

  காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக நானிங்கு வந்து நகர்ந்தே விட்டது ஒரிரு திங்களும் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக வடக்கின் வசந்தமாம்(?) இராஜபக்சே பிளிறுகிறது காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக புலிகளால் மட்டும் தான் இவ்வளவு பிரச்சனையாம் மடை மாற்றுகிறார்கள் புத்திசாலிகள்(?) காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக இங்கே இருப்பது இன்னல் முகாம் இடப்பெயர்வு முகாமல்ல கதைக்கின்றனர் மாந்தநேயர்கள் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக இங்கே நிலைமையை சீர்(ழ்)படுத்த இந்தியாவும் கொடுத்தது அறுநூறு கோடியும் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக சோமாலியா தேவை இல்லை இங்கே வந்து எங்களைப் பாருங்கள் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.